முதியோரைக் காவாதான் மூடன் முறையாய்
மதித்து நடத்தல் மதி 161
பெற்றோரைக் காக்காத பேதையோ பேருலகம்
சுற்றினும் இல்லை சுகம் 162
மாற்றில்லம் காட்டி மதியாத பிள்ளைக்குக்
கூற்றில்லம் தேடி வரும் 163
மெத்தப் படித்தாலும் மேன்மை யடைந்திலன்
பெற்ற மனந்தவிக்கும் போது 164
தனிக்குடும்பம் வேண்டித் தனிமைப் படுத்தின்
தனிமைப் படுவாய் தளர்ந்து 165
பெற்றோரைக் காவாதான் பிள்ளையும் அவ்வழியே
பெற்றோரைக் காவாது போம் 166
ஆண்டாண்டு வாழ்ந்திருந்(து) ஆனந்தம் காண்வயதில்
வேண்டுமோ வேறில்லம் சொல் 167
மீண்டும் மழலை மனத்திற்கு மாறுவோர்க்கு
வேண்டும் அரவணைப்(பு) அன்பு 168
மூத்தோரின் பட்டறிவு முன்னேற்றம் தந்துதவும்
காத்தோரே வாழ்வார் களித்து 169
மூத்தோரின் வாழ்வியல் முத்தான வாழ்வியலாம்
காத்தோம்பிக் கொள்க கனி 170
No comments:
Post a Comment