Oct 18, 2020

மணிக்குறள் - 16. அரசியலார்

நேர்மையைக் கைக்கொண்டு நேர்வன நேர்நிறுத்துங்
கூர்மை அறிவுடையான் கோன்                         151

சீர்தூக்கிப் பார்த்துச் சிறப்புடைய வாழ்வமைக்க
ஊர்தூக்கி வாழ்த்தும் உணர்                               152

பொல்லா தனசெய்யும் போக்கற்றோன் மன்னனாய்
நில்லான் நிலத்தில் நிலைத்து.                           153

பொதுநலம் போற்றாது பொய்ம்மை பரப்பி
மதுநலன் காப்போ மறை?                                   154

ஆக்கா(து) அழிக்கும் அறிவிலான் ஆட்சியோ
தீக்கிரை யாக்கும் தெளி                                       155

அரசியலார் ஆயின் அரசியலார் ஏனோ
அரசியல் ஆற்றவரு வார்?                                     156

பிழைத்துப் பிழைப்பின் பெரும்பழி சேரும்
பிழையற்(று) அரசியல் பேண்                             157

முறைதவறி வென்று முறையியற்றும் ஆறு
கறையன்றி வேறென்ன காண்                            158

சட்டத்தை மீறித் தனிச்சட்டம் செய்வார்தம்
கொட்டம் அடக்கக் குதி                                          159

போலியாய் வாழ்ந்து பொறுப்பற்றுப் போகாமல்
வேலியாய் வாழ்பவன் வேந்து                             160

No comments:

Post a Comment