Feb 7, 2021

மணிக்குறள் - 32. இன்சொல் உரை

வன்சொல் வழங்க வருந்துன்பம் யாவர்க்கும்
இன்சொல்லே இன்பம் தரும்                           311

நயம்படப் பேச நலனாகும் நாடான்
இயம்புவ தெல்லாம் இழிவு                              312

இன்சொலால் அன்றி இதயம் இணையாது
வன்சொலால் இல்லை வனப்பு                      313

வன்சொல் லுரைப்பார்க்கு வாழ்வில்லை தாழ்வில்லை
இன்சொல் லுரைப்பார்க்குத் தான்              314

வெல்வது போல்தோன்றி வேட்ட பொருளீந்து
கொல்வது வன்சொல் கொடை                     315

உடனிருந்து கொல்லும் உயர்விலா வன்சொல்
மடநெஞ்சே வேண்டாதே மாற்று                  316

நாவினிக்கப் பேசும் நலனுடை நெஞ்சினைப்
பாவினிக்கப் பாராட்டும் பார்                       317

என்செய லாயினும் என்றும் நலம்பெற
இன்சொல் லுரைத்தலே ஈர்ப்பு                     318

அன்புடையார் வாயமிழ்தம் ஆகுவ(து) இன்சொல்லே
நண்புடையார் நாட்டமும் அஃது                  319

சொல்லும் முறைமையால் சோர்வகற்றி எஞ்ஞான்றும்
வெல்லும் வழியளிப்பால் வேள்                    320

No comments:

Post a Comment