Mar 21, 2021

மணிக்குறள் - 38. உன்னை உணர்

உன்னையே நீயறிவாய் உண்மையறி வாயென்று
சொன்னாரே சாக்கிரட் டீசு                                371

உன்னை உணர்வாய் உயர்ந்த அறிவாகும்
பொன்னாய் உரைத்தாரைப் போற்று           372

என்ன செயவேண்டும் என்னும் தெளிவெல்லாம்
உன்னை உணர வரும்                                          373

கடுஞ்சினத்தாற் காயாது காக்கும் வழிசெய்
விடுந்துன்பம் உன்னை உணர்ந்து                 374

கண்ணாடி முன்னின்று காணும் புறம்போல
எண்ணத்தால் ஆடும் அகம்                               375

அகக்கண்ணால் நோக்கி அழகுசெய் ஆற்றல்
தகவமைந்து நன்மை தரும்                              376

ஆற்றல் பிறக்கும் அகத்தை அறிந்தாற்ற
ஆற்றல் அமைதி தரும்                                        377

ஊரும் உறவும் உணர்ந்து பயன்செய்க
பேரும் புகழும் பிறப்பு                                         378

எல்லா உயிருமிங்(கு) இன்புற்று வாழற்காய்
எல்லாம் இயற்றுக ஈந்து                                     379

மனிதனாய் வாழ மனம்வைக்க மண்ணில்
புனிதனாய்ப் பூப்பாய் பொலிந்து                  380

No comments:

Post a Comment