உன்னையே நீயறிவாய் உண்மையறி வாயென்று
சொன்னாரே சாக்கிரட் டீசு 371
உன்னை உணர்வாய் உயர்ந்த அறிவாகும்
பொன்னாய் உரைத்தாரைப் போற்று 372
என்ன செயவேண்டும் என்னும் தெளிவெல்லாம்
உன்னை உணர வரும் 373
கடுஞ்சினத்தாற் காயாது காக்கும் வழிசெய்
விடுந்துன்பம் உன்னை உணர்ந்து 374
கண்ணாடி முன்னின்று காணும் புறம்போல
எண்ணத்தால் ஆடும் அகம் 375
அகக்கண்ணால் நோக்கி அழகுசெய் ஆற்றல்
தகவமைந்து நன்மை தரும் 376
ஆற்றல் பிறக்கும் அகத்தை அறிந்தாற்ற
ஆற்றல் அமைதி தரும் 377
ஊரும் உறவும் உணர்ந்து பயன்செய்க
பேரும் புகழும் பிறப்பு 378
எல்லா உயிருமிங்(கு) இன்புற்று வாழற்காய்
எல்லாம் இயற்றுக ஈந்து 379
மனிதனாய் வாழ மனம்வைக்க மண்ணில்
புனிதனாய்ப் பூப்பாய் பொலிந்து 380
No comments:
Post a Comment