Mar 18, 2021

பாலச்சந்தர் (திருமண வாழ்த்து)

இளஞ்சந் திரனே! இளஞ்சந் திரனே!
உளஞ்சார்ந் தொருநாள் உறவென நிற்பாள்
எங்கே நிற்பாள்? எழிற்கனாக் கண்டு
பொங்கும் மகிழ்வு பொருந்து நாட்காய்க்
காத்திருந் தாயே! காத்திருந் தாயே!
பூத்திருந் தாளைப் புன்னகை யாளை
ஏற்ற நாளிஃ(து) இரம்மிய மிக்க
ஊற்றாஞ் சிந்தைக் குரிய பொன்னைப்
போற்று வாயே! 
போற்று வாயே! 

No comments:

Post a Comment