மீட்சி யொளியாய் விவேக மனங்கொண்டார்
மாட்சிமை போற்றும் உலகு 1
சின்ன கலைவாணர் சிந்திக்க வைத்தினிக்கும்
கன்னலாய்ச் சேர்த்தார் சிரிப்பு 2
சான்றாய்த் திகழ்ந்தார் சமுதாயம் முன்னேறத்
தோன்றுகோள் கொண்டார் தொடர்ந்து 3
பொதுநோக்கு நோக்கிப் புதையலைத் தோண்டி
இதுநோக்கென்(று) இட்டார் மரம் 4
சிந்திக்க வைத்துச் சிரிக்கவும் வைத்தார்நம்
சிந்தைக்குத் தந்தார் வரம் 5
நகைவகை நான்கும் நயமாய் நிறுத்தித்
திகைக்கச் செயல்பட்ட தேன் 6
காட்சியின் மாட்சியில் மீட்சிகொள் நெஞ்சமே
ஆட்சியில் நின்றார் அணைத்து 7
அடாதன பேச அடாதன ஆகும்
விடாதெடுத்துக் காட்டி யவர் 8
உள்ள மிருந்தால் உயர்ந்தன செய்யலாம்
தெள்ளத் தெளிவாக்கி னார் 9
பொன்னுடல் நீங்கிப் புகழுடல் தாங்கினார்
தன்னுட லாய்மரங்கள் சான்று 10
No comments:
Post a Comment