Sep 16, 2011

அன்புத் தொல்லை (திருமண வாழ்த்து)

ஆம் சொல்லு ஜீவா...!

எங்கடா இருக்க? ஆஃபிஸ்லயா?

இல்ல வீட்லதான் இருக்கேன்... மார்னிங் ஷிஃப்ட்...

சரி! ஒரு கல்யாணம். ரிசப்ஷனுக்கு வந்திருக்கேன்டா...! உடனே ஒரு கவிதை வேணும்!

டேய்! மணி இராத்திரி பத்தரை ஆகுது...! தூங்கப்போற நேரத்துல கவிதை கேக்கற?

இதோ பார்ரா...! இன்னும் பத்து நிமிஷத்துல எனக்கு கவிதை வரலனா, தூங்க விடாம தொல்ல பண்ணுவேன்... நீ ஃபோன சுவிட்ச் ஆஃப் பண்ணாலும் எப்படியாவது தொல்ல பண்ணுவேன்!!!

(அவன் எப்படித் தொல்லை கொடுப்பான் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை... அவனுக்குத்தான் தெரியும்)

அதல்லாம் முடியாது...! குட் நைட்...

உடனே அனுப்புற... ஃபோன வையிடா...

அழைப்பு துண்டிக்கப்பட்டது...!

மறுபடியும் அலைபேசியில் அழைத்தேன்... அழைப்பு ஒலி அடித்து ஓய்ந்தது... அடுத்த இரண்டு நிமிடங்களில் ஜீவாவிடமிருந்து அழைப்பு.

ஏய்...! உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல...? சரி! ஒரு எட்டு வரில பொதுவா ஒரு வாழ்த்துக் கவிதை இருக்கு... அனுப்பவா? மெயில்ல அனுப்பவா?

டேய்...! இப்ப வேணுங்கிறேன்...! எப்ப போய் பிரிண்ட் அவுட் எடுத்துக் குடுக்கறது? மெசேஜ்ல அனுப்புடா... சும்மா நாலு வரில நச்சுனு இருக்கணும்.

நாலு வரியெல்லாம் கவிதையா...? சரி... பொண்ணு மாப்பிள்ளை பேர சொல்லு...

அந்த அண்ணன் பேரு அறிவழகன்... அவங்க பேரு வீணா...

மீனாவா...?

'வீ... வீ...' டா...

ஓ! 'வீணா' வா?

சரி சரி... மெசேஜ் அனுப்புறேன்!!!

அடுத்த பத்து நிமிடங்களில் மீண்டும் ஜீவாவை அழைத்தேன்... அழைப்பு ஒலி அடித்து ஓய்ந்தது... சற்று நேரம் கழித்து, ஜீவாவிடமிருந்து அழைப்பு..

சொல்லுடா...

மெசேஜ் வந்துச்சா...?

இதோ பாக்குறேன்...

காமெடியாதான் இருக்கும்... என்ன பண்றது...?

ஆம்... ஓகே! சரி ஃபார்வார்ட் பண்றேன்...

சரி... இப்ப எங்க இருக்க...? யாருக்குக் கல்யாணம்...

மைலாப்பூர்லதான்டா இருக்கேன்... அந்த அண்ணன் எங்க ஊருதான். ரிசப்ஷன் இங்க வச்சிருக்காங்க...

சரி... ஓகே! டேக் கேர்... பை...

உம். பை...

உம்.

அழைப்பு துண்டிக்கப்பட்டது...!

--------------------------------------------------------------------------------------------
வீணையும் ஞானமும் வாணியின் சொத்து!
சேர்ந்தது அழகெனும் செம்மைநல வித்து!
உளம்நிறை மகிழ்விலே வசந்தங்கள் சேர்த்து
உயர்வுதான் வாழ்விலே என்பதென் வாழ்த்து!

என்செய்ய...? இதையும் கவிதையென ஏற்றுக்கொள்கிறார்கள்...
எனக்குத்தான் திருப்தி இல்லை!
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோட வேண்டுமே என்று!
ஓடட்டும் எனச் சேர்த்தால் ஓசை நழுவுமே என்று!

No comments:

Post a Comment