Oct 10, 2015

முருகன்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் (விளம்-மா-மா)

முருகனே! கந்த னே!கார்
  முகில்வணன் மருக னே!செந்
திருக்கரத் தால ருள்சேர்
  திருப்பரங் குன்றக் கோனே!
செருப்புகு செவ்வேல் வீர!
  சீரலை வாயிற் கோவே!
திருப்புகழ் நாளும் ஓத
  திருவருள் மோதும் அன்றே!                          1

சேவலுஞ் செவ்வே லுங்கை
   சேர்ந்தொரு தீரம் காட்டும்
காவலுக் கும்ப ழத்தால்
   காவலுக் கங்கு பாகு
நாவலை உலுக்கிப் பாட்டி
   நாவளம் நாணச் செய்தே
ஆவலைப் பெருக்கி ஆங்கே
   அருந்தமிழ் பருகி னானே!                              2
          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment