Oct 31, 2015

இதழகல் வெண்பா

இதழகல் குறள்வெண்பா

எந்தாய்! எழிலாய்! எனைக்காத் தகலச்செய்!
கந்தா!நின் கையால் கலி

இதழகல் நேரிசை வெண்பா

ஐய!நின் ஆக்கச் செயல்திறத் தையெண்ணிச்
செய்யச்சீர் எண்ணத்தார் சேர்ந்திடச் - செய்யிதனை
யென்றாண் டதனைச் செழிக்கச்செய் யாற்றலை
நன்றாய்நான் சாற்றலெந் நாள்?

இதழகல் இன்னிசை வெண்பா

கண்ணா யெனநான் அழைத்தேன்நின் கண்காணா
தெண்ணாதே யென்றறைந்தாய்! என்செய்கேன்? ஏந்திழையே!
எண்ணத்தே நீநிறைந்தாய் எங்கே தனித்தியங்க?
தண்ணிய நெஞ்சத்தைத் தா

                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

1 comment:

RPSINGH said...

உங்கள் வலைப்பூவை எவ்வாறு பின் தொடர்வது ...?

Post a Comment