முனைவர் அர. விவேகானந்தன்
ஆன்ற புலமை அரவிவேக ஆனந்தர்
ஈன்ற குழவியென்பேன் யான் 21
செந்நா வுரைகண்டு சீர்விவேகம் பற்றுதலின்
எந்நாளும் ஆனந்த மே 22
தான்கற்ற தண்டமிழைத் தன்னோடு வைத்திராது
வான்பற்ற வைப்பார் வகை 23
அருந்தமிழ் ஆற்றுப் படுத்தும் அகத்துப்
பெருமிதம் போற்றுக பேறு 24
கோடாங் குளத்துக் கொடைநலம் வாழிய
வாடாங்கு வண்டமிழ்ச் சொல் 25
கோடானு கோடி கொடுப்பினும் செந்தமிழக்
கோடாங்கல் கோடி பெறும் 26
ஆயிரம் பாக்கள் அழகாய் இயற்றினும்
பாயிரம் ஆசானே பார் 27
அந்தமிழக் காதலர் ஆற்றல்சால் பாவலர்
சிந்தனை யெல்லாந் தமிழ் 28
உளங்குளிர்ந்(து) உச்சி முகர்வாள் தமிழ்த்தாய்
துளங்கும் மரபெழிலைக் கண்டு 29
செந்தமிழ் போற்றும் செழியன் சுடர்விழி
நந்தமிழ் ஆசான் நகல் 30
No comments:
Post a Comment