Aug 9, 2020

மணிக்குறள் - 6. நூலகம்

நூலகம் நாடி நுவல்வ(து) அறிவோம்கண்
போலது நல்வழிக்குச் சான்று                            51

நல்லநல்ல நூல்நாடி நாமுயர வேண்டும்கேள்
கல்வியே கண்ணாகும் காண்                           52

காண்டற்(கு) அரிய கணக்கின்றிக் காட்டிநீ
வேண்டத் தரும்நூ லகம்                                      53

பண்பட்ட வாழ்க்கைக்குப் பாதை அமைக்கும்உன்
எண்ணந் தொடநூ லகம்                                     54

எண்ணடங்கா நூல்களை எண்ணி மகிழ்வதற்(கு)
உன்னடங்காச் சிந்தை உலை                          55

புத்தகம் பெற்றுப் புதுவாழ்(வு) அமைத்தற்குப்
புத்தகம் வேண்டும் புரி                                        56

புத்தக மேதை புகலுஞ்சொல் கேட்டால்நீ
வித்தக மேதையா வாய்                                       57

கருமையெனும் வாழ்வைக் களிப்புடைத்தாய் மாற்றும்
பெருமை உடையது நூல்                                     58

நூஉல் நுவல்வது நுண்ணிதாயப் பேரறி(வு)
ஆஅல் அதுபோல் அகன்று                                  59

ஆக்கலும் காத்தலும் ஆழ்ந்தறியும் ஆற்றினுக்(கு)
ஊக்கம் தருவது நூல்                                             60

No comments:

Post a Comment