Aug 30, 2020

மணிக்குறள் - 9. மனிதம்

அன்பால் இயங்கும் அகிலம் அலாதவழி
வன்பால் வதையும் உயிர்                        81

அரசகன்(று) ஆசை அழித்துலகுக்(கு) அன்பு
முரசறைந்தான் புத்தன் வழி                  82

அன்னை தெரசா அகிலத்தை வென்றதோ
அன்பெனும் ஆயுதத் தால்                        83

தீச்செயல் ஆவது தீண்டாமை; வேண்டாமை
மாச்செயல் மண்ணுக்(கு) இனிது         84

பொருள்சேர்த்துத் துய்க்காமல் போதற்குத் தாமீந்(து)
அருளாளன் ஆதல் இனிது                        85

ஈவ(து) எதனை எனவறிந் தேசெய்க
ஆவ(து) அதன்வழி யால்                            86

அருளுள்ளம் வேண்டும் அதுமனிதம் என்றும்
பொருளுள்ளம் வேறில்லை போற்று    87

மனிதம் மறந்தாற்றும் மாச்செயல் மாண்பன்(று)
இனிச்செய்வ(து) ஓர்ந்து தெளி               88

வேண்டும் இடத்துதவி வேண்டாமல் செய்தலே
யாண்டும் இனிமை தரும்                         89

அன்பும் கருணையும் ஆர்ந்த ஒருவனே
என்றும் மனிதனென ஏத்து                        90

No comments:

Post a Comment