Jan 3, 2021

மணிக்குறள் - 27. நன்றி மறவேல்

நேரத் துதவிய நேரிய நெஞ்சினை
ஆரத் தழுவி அணை                                            261

துன்ப நிலைமாறத் தூணாய் இருந்தவரை
என்றும் நினைத்தல் இனிது                             262

தங்க மனத்தினர்க்குச் சாற்றுக பாமாலை
பொங்கும் உளத்தால் புகழ்ந்து                       263

நன்று புரிதற்கு நல்ல மனம்வேண்டும்
நன்றி யறிதலே நட்பு                                            264

நன்றி யுடைமை நலனாம் இலாமையோ
கொன்று விடுதற் கிணை                                  265

தடைகள் அகற்றித் தடமாக்கும் உள்ளம்
கடவுளாம் காண்பாய் கனிந்து                        266

முன்னேற்றம் காண முதலாக நின்றாரைப்
பொன்னாகப் போற்றிப் பொலி                      267

நன்றொன்றிச் செய்தாரை நன்றி யுடனினைதல்
நன்றென்று சொல்வோம் நயந்து                  268

இன்றி யமையா இயலறி வாசிரியர்
நன்றி மறவோமே நாம்                                       269

அறிவு புகட்டி அருவழி காட்டிச்
செறிந்தார்க்கு நன்றி நவில்                             270

No comments:

Post a Comment