Jan 17, 2021

மணிக்குறள் - 29. நூல் பல கல்

நூல்பல கற்று நுவல்வது நன்றாகும்
ஆல்போல் தழைக்கும் அறிவு                    281

அறிவு விருந்தை அகத்திற் களித்துச்
செறிவாக்க நூல்பல கல்                              282

காணாத வெல்லாம் கருத்தில் புகுந்தொளிர
வாணாள் முழுதும் படி                                  283

வழிவந்த செல்வமும் வாணாளும் போகும்
அழிவின்றிக் காக்கும் அறிவு                     284

கரையில்லா நூலைக் கரைத்துக் குடிக்க
வரையில்லா இன்பம் வரும்                      285

பலப்பலவாய்ப் பாரில் பளபளக்கும் நூல்கள்
சிலச்சிலவே வாழ்வினில் சேர்ப்பு          286

எழுக எழுந்தொருநூல் எண்ணத்தில் சேர்க்க
விழைகவெந் நாளும் சிறப்பு                    287

எட்டாத் தொலைவெலாம் எட்டுதற் கெந்நாளும்
தொட்டுப்பார் நூல்களைத் தோய்ந்து  288

கண்முன்னே நூல்களைக் காணு மிடத்தில்வை
எண்ணங்கள் எல்லாம் நிறைவு               289

புத்தகம் பெற்றுப் புதுமை படைத்தற்குப்
புத்தகத்தை வித்தகமாய்ப் பூட்டு           290

No comments:

Post a Comment