நூல்பல கற்று நுவல்வது நன்றாகும்
ஆல்போல் தழைக்கும் அறிவு 281
அறிவு விருந்தை அகத்திற் களித்துச்
செறிவாக்க நூல்பல கல் 282
காணாத வெல்லாம் கருத்தில் புகுந்தொளிர
வாணாள் முழுதும் படி 283
வழிவந்த செல்வமும் வாணாளும் போகும்
அழிவின்றிக் காக்கும் அறிவு 284
கரையில்லா நூலைக் கரைத்துக் குடிக்க
வரையில்லா இன்பம் வரும் 285
பலப்பலவாய்ப் பாரில் பளபளக்கும் நூல்கள்
சிலச்சிலவே வாழ்வினில் சேர்ப்பு 286
எழுக எழுந்தொருநூல் எண்ணத்தில் சேர்க்க
விழைகவெந் நாளும் சிறப்பு 287
எட்டாத் தொலைவெலாம் எட்டுதற் கெந்நாளும்
தொட்டுப்பார் நூல்களைத் தோய்ந்து 288
கண்முன்னே நூல்களைக் காணு மிடத்தில்வை
எண்ணங்கள் எல்லாம் நிறைவு 289
புத்தகம் பெற்றுப் புதுமை படைத்தற்குப்
புத்தகத்தை வித்தகமாய்ப் பூட்டு 290
No comments:
Post a Comment