பொருளின்றி வாழ்வில்லை பூவுலகில் ஈட்டும்
அருமை உணர்தல் அறிவு 291
பொழுதுகள் யாவும் பொருளீட்டும் எண்ணத்
தழுந்திக் கரையும் அமைவு 292
வாணாள் திரும்பாது வாழும்போ தேதேடு
காணாது துன்பம் கதவு 293
கொடுக்குமா தெய்வங்கொல் கூரையைப் பிய்த்து
விடுத்துக் கனவை விரட்டு 294
அறவழி நின்றாய்ந் தரும்பொருள் ஈட்டக்
குறைவின்றி வாழ்வாய் குளிர்ந்து 295
ஆக்கல் அழித்தல் அரிதெளிது போக்கை
அறிதல் அரிதி னரிது 296
உள்ளுங் கனவுகள் ஒன்றி நிறைவேற
உள்ளம் பொருளினால் உண்டு 297
கைப்பொருள் நீங்கின் கடிதினில் வாராதே
மெய்ப்பொருள் என்பதே மெய் 298
மனமிருந் தால்வழி வந்தமை தற்போல்
பணமிருந் தாலுண்டு பார் 299
பொருடனைப் போற்றப் புதுவழி யாக்கும்
இருடனைப் போக்கும் இரித்து 300
No comments:
Post a Comment