Jan 24, 2021

மணிக்குறள் - 30. பொருடனைப் போற்று

பொருளின்றி வாழ்வில்லை பூவுலகில் ஈட்டும்
அருமை உணர்தல் அறிவு                                       291

பொழுதுகள் யாவும் பொருளீட்டும் எண்ணத்
தழுந்திக் கரையும் அமைவு                                   292

வாணாள் திரும்பாது வாழும்போ தேதேடு
காணாது துன்பம் கதவு                                            293

கொடுக்குமா தெய்வங்கொல் கூரையைப் பிய்த்து
விடுத்துக் கனவை விரட்டு                                      294

அறவழி நின்றாய்ந் தரும்பொருள் ஈட்டக்
குறைவின்றி வாழ்வாய் குளிர்ந்து                      295

ஆக்கல் அழித்தல் அரிதெளிது போக்கை
அறிதல் அரிதி னரிது                                                296

உள்ளுங் கனவுகள் ஒன்றி நிறைவேற
உள்ளம் பொருளினால் உண்டு                            297

கைப்பொருள் நீங்கின் கடிதினில் வாராதே
மெய்ப்பொருள் என்பதே மெய்                            298

மனமிருந் தால்வழி வந்தமை தற்போல்
பணமிருந் தாலுண்டு பார்                                      299

பொருடனைப் போற்றப் புதுவழி யாக்கும்
இருடனைப் போக்கும் இரித்து                             300

No comments:

Post a Comment