இல்லம் அடைந்தாரை இன்முகத் தோடழைத்து
நல்ல விருந்து படை 271
மலர்ந்த முகத்தொடு வாவென் றழைத்து
நலமறிதல் நல்ல விருந்து 272
உப்பிலாக் கூழும் உறவுக் கமிழ்தமாம்
தப்பாமல் வந்தோரைத் தாங்கு 273
மலர்முகம் இன்சொல் மகிழுணா மூன்றும்
கலந்ததே நல்விருந்து காண் 274
விருந்தோம்பி வாழ்வார்தம் வீட்டில் நிறையும்
பெருஞ்செல்வம் ஊறும் கிணறு 275
செல்வமும் செல்வமெனச் சேரிடம் மாறினும்
நல்விருந்து போற்ற வரும் 276
பசியென்று வந்தார்க்குப் பண்பாடு போற்றிப்
புசியென் றளித்தல் புகழ் 277
விருந்தோம்ப உள்ளம் விழைந்தார் இருக்க
இருந்தோம்பும் இவ்வுலகம் ஈந்து 278
விருந்து படைக்க விழைந்த உளத்துப்
பொருந்துங் குணத்துப் பொலிவு 279
சுரும்புக்குச் செம்மலர் செந்தேன் படைக்கும்
விருந்தொக்க ஓம்பல் விழை 280
No comments:
Post a Comment