Mar 15, 2014

நூற்கவியை யாப்பேனோ?

தரவு கொச்சகக் கலிப்பா

யாதொன்றும் அறியானா னேனென்றும் தான்றோன்றாத்
தீதென்றும் உணரானா னேனென்றும் வீடாயோ
போதேதே னேபோதும் போதாயெண் ணாயாகின்
யாதானும் மனத்தானே நூற்கவியை யாப்பேனோ?

                                                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரித்தறிய :
யாதொன்றும் அறியான் ஆனேன் என்றும் தான்றோன்றாத்
தீதென்றும் உணரான் ஆனேன் என்றும் வீடாயோ?
போதே! தேனே போதும் போதாய்! எண்ணாய் ஆகின்
யாதானும் மனத்தானே நூற்கவியை யாப்பேனோ?


பொருள்:
எதுவும் அறியாதவன் ஆனேன் என்றும், சுயமாய்ச் சிந்தனையில் எதுவும் தோன்றாமல், தீமை என்றும் உணராதவன் ஆனேன் என்றும் அறிந்து, என்னை விட்டு விலகாது இருப்பாயோ? பூவே! தேனே! நீ என்னை விட்டுப் போவாய் ஆயின், என்னை நினைக்காதிருப்பாய் ஆயின், என் மனத்தில் இன்பம் நிரம்பி, எப்படி நான் கவிதைகளை இயற்றுவேன்?

No comments:

Post a Comment