Mar 15, 2014

ஹரிஷ் காதர் (திருமண வாழ்த்து)

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஒன்றுள்ளும் ஒன்றுள்ளம் என்ற றிந்தே
   உயர்மொழியும் வழிச்செயலும் உணர்வும் ஓங்க
நன்றென்றும் நின்றகைமை நானி லந்தான்
   நலம்வாழக் குலம்வாழ நற்பே றுற்றுச்
சென்றவிட மெல்லாஞ்சி றப்பே யெய்திச்
   செயலாற்றல் கொண்டேத்தும் ஆற்றில் ஆற்றிக்
கன்றுள்ளத் தன்புற்றுக் கவின்மே லோங்கக்
   காதரரிஷ் யாஸ்மின்வாழ் மின்வாழ் மின்னே!
                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

No comments:

Post a Comment