Mar 15, 2014

தமிழ்படி

நேரிசை வெண்பா

ஆதி யெதுவென் றகழ்ந்திடிலேன் அந்தமிழே!
பாதியில் வந்தனன் பற்றுக்கொண் – டோதி
நெறியினின் றுன்முறை மையறியப் புக்கும்
வறியன் வழிமுறை சொல்.                                     1


என்றமிழின் ஆதி யெதுவென்று தானெண்ணிச்
சென்றவுளம் சென்றளவும் சேராமல் – நின்றயர்ந்(து)
அன்று முதலறிந்த அத்தனையும் இங்கில்லை
என்றுதொல் காப்பிய மோது.                                   2

                           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment