Mar 15, 2014

செந்தமிழ்ப் பாகர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

யார்வரு வாரிங் கெல்லாரும்
    யென்றெதிர் பார்த்தல் நன்றலவே!
கார்பொழி கவின்ற மிழ்மொழியே!
    காலமும் நின்றன் கணக்கறியா!

ஆர்வலர் அவனி யெங்குமுண்டு
    அந்தமிழ் பசுமை ஆர்தமிழே!
தேர்வலம் தேரகம் மண்டலமே!
     செந்தமிழ்ப் பாகர் பலருண்டே!

                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment